மதுரை : உசிலம்பட்டி உட்கோட்டம் உத்தப்ப நாயக்கனூர், பாப்பாத்தி ஒச்சாண்டம்மன் கோவிலின் உண்டியலை இரவு நேரத்தில் திருடர்கள் யாரோ உடைத்து, அதிலிருந்து பணத்தை திருடி சென்றதாக பாப்பாபட்டி கிராம நிர்வாக அலுவலர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள், உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் , விசாரணை செய்து, பாப்பாபட்டியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் தர்மர் என்பவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து உண்டியலில் திருடப்பட்ட பணம் ரூ 5, 76,230/- மற்றும் சுமார் 3, 3/4 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், இத்திருட்டு வழக்கில் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத், அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.