தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரட்டைகுளம் அம்மன் கோவில் உண்டியலிருந்து மர்ம நபர்கள் பணம் திருடியதாக அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற நபர் கொடுத்த புகாரின் பேரில், சார்பு ஆய்வாளர் திரு. சொரிமுத்து, அவர்கள் திருட்டுக் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்த பீர் மைதீன் என்பவரின் மகன் மேத்தர்(19), என்ற நபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மேற்படி மேத்தர் என்ற நபர் மீது ஏற்கனவே சுரண்டை, சாம்பவர் வடகரை, ஆய்க்குடி ஆகிய காவல் நிலையங்களில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.