கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி வேலை செய்து வருவதாகவும் 19.08.2023 ஆம் தேதி காலை தன்னுடைய இருசக்கர வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்தி விட்டு வேலை செய்யச் சென்று மாலை சுமார் 6.00 மணிக்கு வேலை முடித்து வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என 22.08.2023 ஆம் தேதி வெங்கட்ராமன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்