திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31), என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1,00,000/- பணத்தை நூதன முறையில் ஏமாற்றியதாக விக்னேஷ்பாண்டி என்பவர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,00,000/- பணத்தை மீட்டனர் இதையடுத்து (16.09.2022), திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் திரு.விக்னேஷ்பாண்டி அவர்களிடம் ரூ.1,00,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா