சேலம் : சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சைபர் கிரைம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள், சேலம் மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர்களைக் கொண்டு மைம் ஷோ நடத்துவதற்கு ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார். அவர்களின் மூலம் சேலம் சரகம் முழுவதும் பல இடங்களில் இது மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக (8/4/2023) ஆம் தேதி சேலம் மாநகரில் தமிழ்நாடு வைகை பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கத் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் சேலம் மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர்கள் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை மைம் ஷோ மூலமாக நடத்தினர். இது அங்கிருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மேற்படி குழுவினரை சேலம் சரண் காவல்துறை துணை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும் சரகம் முழுவதும் அடிக்கடி இது மாதிரியான விழிப்புணர்வை நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்