செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர் (Data Entry Assistant/Recepionist) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது.
மேற்படி அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் (30.08.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் IPS., அவர்கள் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்கள்.