தங்கபஸ்பம் – ஆவாரம்பூ : ”ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ” என்ற பழமொழியில், இருந்து ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஆவாரைச் செடியின் பூ இயற்கையாக, மிக எளிதாக, விலையில்லாமல் கிடைக்கக்கூடிய ”தங்க பஸ்பம்” என்றே சொல்லலாம். ஆவாரம்பூ மேனியை பொன்னிறமாக்கும் சக்தி கொண்டது, ஆவாரம்பூவை காலையில் ஒரு கைப்பிடி, மாலையில் ஒரு கைப்பிடி சாப்பிட்டு வர ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து உடலை பொன்னிறமாக்கும் அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை.
ஆவாரம் பூவை கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை, நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு, துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும். ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். காலை, மாலை அரை தேக்கரண்டி ஆவாரம்பூ சூரணத்தை பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும். ஆவாரம்பூக்களையும், இலை கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, ஒரு ஸ்பூன் தூளை ஒரு கிளாஸ் நீரில் கால் கிளாஸ் ஆகும் வரை கொதிக்க வைத்து கஷாயமாக்கி இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
ஆவாரம்பூ பொடி : ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு அதை, உபயோகிக்கும் விதம், சிறுது பொடியுடன் இளம் வெந்நீர் விட்டு குழைத்து பேஸ்ட்பதத்தில் ஆக்கி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் உடல் சூட்டினால் ஏற்படும் கண் சிவப்பு நிறம் மாறும். ஆவாரம்பூ பொடியை தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு வெந்நீரில் கலந்து அருந்திவர ரத்தசோகை குணமாகி, புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.
ஆவாரம்பூ பொடியை காலை இரவு என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் வெந்நீரில் கலந்து அருந்திவர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும். ஆவாரம்பூ பொடியுடன் சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும், கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.
காய்ந்த ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, காய்ந்த ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
ஆவாரம் பூ மணப்பாகு : ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா, ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம் தீரும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும்.
ஆவாரம்பூ குடிநீர் : ஆவாரம் பூவை நீரில் 8 மணிநேரம் ஊறவைத்த குடிநீர் அல்லது நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம், அதனால் தீரும். நோய்கள் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூடு, வறட்சி நீங்கும். நீர்க்கடுப்பு குறையும். பித்த அதிகரிப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும், அவர்களுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம் குறையும். நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுக்கு நல்ல மருந்து. மேக வெட்டை, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல். உடல் சோர்வு நீங்கி, உடலுக்குப் பலத்தைத் தரும்.
ஆவாரம்பூ டீ, தயாரிக்கும் முறை : தேவையானவை, ஆவாரம்பூ பொடி (காயவைத்து அரைத்துக் கொள்ளவும்) – ஒன்றரை டீஸ்பூன்இஞ்சி- சிறிய துண்டு ஒன்று பால் – ஒரு டம்ளர்
கருப்பட்டி – சிறிய துண்டுமிளகு அரை டீஸ்பூன் தண்ணீர் ஒரு கப்ஏலக்காய் – 2
செய்முறை : ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும். பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம். ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம்.