அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின் படி, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடுத்த மைல் கல்லாக அனைத்து சிமெண்ட் ஆலை மற்றும் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேட்ச் மற்றும் சுழற்சிமுறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 10/8/2020 அன்று ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம்,மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டி செல்லும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதியாக ஓட்டுநர்கள் அனைவரும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சாலை விதிகளை மதிப்பும் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.