ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கரைப்பகுதியை நோக்கி வந்த நாட்டுப்படகை நோக்கி போலீசார் சென்றனர். உடனே படகை கரையில் நிறுத்தி விட்டு கும்பல் தப்பியது. தார்ப்பாயினால் மூடியிருந்த படகை சோதனையிட்டதில் 2 டன் எடையுள்ள 73 மஞ்சள் மூட்டைகள் இருந்தன. வழியில் இயந்திரம் பழுதானதால் கடத்தல்காரர்கள் படகை கரைக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மஞ்சள் மூட்டைகளையும் நாட்டுப் படகையும் மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த படகு தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தது என்று கூறப்படுவதால், ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்