திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 03.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 300 நபர்கள் மீது 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 204 இருசக்கர வாகனங்களும், 03 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், தேவையற்று வெளியில் வரவேண்டாம் என்றும், இனி வருங்காலங்களில் இது போன்று சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 2500 முக்கவசங்களும், கிருமிநாசினி மருந்துகளும், 40 பாதுகாப்பு கவச உடைகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்திரு.அழகுராஜா