திண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் பழனி சாலை தாலுகா காவல்நிலைய சரகம் அனுமந்தராயன் கோட்டை கிராம் சாமியார் பட்டி கிராமத்தில் சில கல்லூரிமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவுபடி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு.மாரிமுத்து மற்றும் திண்டுக்கல் தாலுகா நிலைய சார்பு ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தனிபடை காவலர்கள் அடங்கிய குழு மேற்படி கிராமத்தில் மூக்காண்டி தேவர் மகன் போஸ் என்பவரது தகர செட்டினை தணிக்கை செய்ய அந்த இடத்தில் 213 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பதை கண்டுபிடிக்க பட்டது.
இதில் சம்மந்தப்பட்ட எதிரிகளான போஸ் (60), மணிமாறன் (28), நாகராஜ் (31), செல்வி (41) , முருகன் (28) ஆகியோறை கைது செய்து அவர்கள் கஞ்சா விற்பனைகாக பயன்படுத்தபட்ட மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் அனைவரையும் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் உட்படுத்தப் பட்டனர்.
மேற்படி சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் பாராட்டினார். மேலும் இது போன்ற சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா