சென்னை : சென்னை, தண்டையார்பேட்டை, டி.எச். சாலை, மணிகூண்டு அருகிலுள்ள செல்வ வாணி மகாலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்து, காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் திரு.தினகரன், இ.கா.ப அவர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.