திண்டுக்கல்: திண்டுக்கல் GTN சாலை அருணா கிளினிக்கில் செந்தில் நாயகி (70) என்பவர் 08.09.19 ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தபோது ஒருவர் அருணா கிளினிக்கில் உள்ளே வந்து மருந்து வாங்குவது போல் அவர் அணிந்து இருந்த 4, 3/4 பவுன் செயினை அத்து கொண்டு சென்று விட்டார்.
இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள மாடன் கண்ட்ரோல் ரூம் CCTV கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து நகர் வடக்கு காவல் நிலைய தனி பிரிவு HC- 954 திரு.அந்தோணி வின்சென்ட் அவர்கள் எதிரிகள் மேட்டுப்பட்டி மொளட்டனம்பட்டி ரோடு வளைவு அருகில் நின்று கொண்டிருப்பதை கண்காணித்தனர். அங்கு பாதுகாப்பு அலுவலில் இருந்த SI திரு.வேலுமணி அவர்களிடம் தகவல் சொல்லி அவர்களுடன் சென்று எதிரிகளை கைது செய்தனர்.
பிடிபட்ட இருவரையும் நகர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் விசாரணை செய்ததில் அவர்கள் பேகம்பூரைச் சேர்ந்த சக்கரை பாபா (24) மற்றும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் (36) என்பது தெரியவந்தது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4, 3/4 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.