சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், காவலன் SOS செயலி பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது எனவும், ஆபத்து நேரங்களில் இச்செயலி மூலம் காவல்துறையை அழைத்து மிக விரையில் காவல்துறையின் உதவியை பெறலாம் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக காவலன் SOS செயலியின் தன்மை, பயன்கள், செயல்படும் விதம், இதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மாணவியர்களுக்கு வழங்கினார். இதன் பயனாக சுமார் 1,200 மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.ஐசரி கே. கணேஷ், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., புனித தோமையர்மலை காவல் துறை ஆணையாளர் திரு.கே.பிரபாகர், காவல் அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை