சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலையத்தில் 19.03.2020 இன்று காலை 7 மணிக்கு சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மதகுபட்டி காவல் நிலைய வளாகத்தில் பசுமையை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் நிழலில் நிற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை சிறப்பித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்