விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு திரு.ஏழுமலை, விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய சிறப்பு திரு. ஜெயக்குமார், கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் நகர காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.நசுருதீன், ஒலக்கூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. குருமூர்த்தி, திண்டிவனம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. மூர்த்தி, ஆகியோர் பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கும், கஞ்சனூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. குமாரசெல்வம், வளத்தி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் உள்பட மொத்தம் 26 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதா,அவர்கள் பிறப்பித்துள்ளார்.