திருச்சி: திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 38 புகார்கள் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளில் பெறப்பட்ட 11 புகார்கள் வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட 02 புகார்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் கொடுத்த 01 புகார் என மொத்தம் 52 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில்,சைபர் கிரைம் பிரிவின் மூலம் காணாமல் போன 52 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தையும் நேற்று 29.11.19-ம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ், IPS அவர்களின் உத்தரவின் பேரில் திருமதி.N.S.நிஷா, IPS காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருச்சி மாநகரம் அவர்களால் காணாமல்போன சுமார் ரூ.5,00,260/- மதிப்புள்ள 52 செல்போன்களை உரியவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி