கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில், உள்ள கரியாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்உதவி ஆய்வாளர் திரு.சுப்ரமணியன், என்கின்ற கோழி சுப்பிரமணியன் காவல் நிலைய வழக்கின் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் செல்வதற்கு சங்கராபுரத்தில் தனது வீட்டில் அதிகாலை சுமார் 5 மணி அளவில் பணிக்கு செல்ல புறப்பட்டபோது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர் அப்போது மருத்துவர் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் செல்வதற்கு மாலையே காவல் நிலையத்தில் இருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பு இச்சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது