திருப்பூர்: ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விடும். இந்த வெயிலை சமாளிக்க பெரும்பாலான மக்கள் தங்களுடைய குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள கொடைக்கானல்இ ஊட்டி உள்ளிட்ட குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்வது உண்டு.
ஆனால் காவலர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். இது தவிர போக்குவரத்து போலீசார் சுமார் 12மணி நேரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை காலத்திற்கு முன்பாகவே தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தொடங்கும் அக்னி நட்சத்திரத்தின் போது தமிழகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினருக்கு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் தெர்மாகோல், சோலார் உள்ளிட்ட பொருட்களால் தயாரான தொப்பிகள் வழங்கப்படுவது உண்டு.
இதுதவிர அவர்களுக்கு மதிய வேளையில் உடலை குளுமையாக வைக்கும் பொருட்டு மோர், ஜூஸ் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்ட அவினாசி போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை காலத்தில் வெயிலை சமாளிக்கும் பொருட்டு காவலர்களுக்கு வெயில் காக்கும் உபகரணங்கள், குளிருட்டப்பட்ட கண்ணாடி, பழச்சாறு மற்றும் மோர் ஆகியவற்றை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் (சட்டம்-ஒழுங்கு) திரு.இளங்கோ, திரு.சதாசிவம் (போக்குவரத்து) மற்றும் திருமதி. பிரேமா,(கிரைம்) போக்குவரத்து காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். வெயிலின் தாகத்தை தீர்க்க காவலர்கள் மோர் மற்றும் பழச்சாறு குடித்து பணியை தொடர்ந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்