அரியலூர் : மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணை செய்ததில் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (31), பிலிச்சிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (28), உடையார் பாளையத்தை சேர்ந்த அபுதாஹிர் (30), ஆகியோர் பாண்டிச்சேரி மாநிலத்தில், இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த மதுபாட்டில்களையும் காவல் துறையினர்,பறிமுதல் செய்தனர்.