சென்னை: தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் மாநில காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற “Ride For Safety Program” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினர்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் இன்று (04.03.2022) மாலை எழும்பூர், மாநில காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற “Ride for Safety Program” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 120 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்து இலவசமாக தலைக்கவசங்களை வழங்கினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து தயாரித்த Projects களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் திரு.J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்) திரு.கபில் குமார் சி சரத்கர், இ.கா.ப, (போக்குவரத்து) இணை ஆணையாளர் திருமதி.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, (தலைமையிடம்) ,போக்குவரத்து துணை ஆணையாளர் கிழக்கு திரு.ஓம்பிரகாஷ் மீனா, காவல் அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .
