தொழிலாளி வெட்டிக்கொலை
மதுரை : மதுரை காமராஜர் பூரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40), இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை காமராஜபுரம் திரு.வி.க. தெருவில் வீட்டு வாசல் முன்பாக நின்றபோது சில மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரைத்துறை காவல் துறையினர் , கொலை செய்யப்பட்ட ராஜேஷ் குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா ?அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஜினியர், தற்கொலை
பெருங்குடி இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (27), இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்ததும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில், இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் எலி விஷத்தை தின்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்ஜினியர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் கொடுத்த புகாரில் பெருங்குடி காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்றரை வயது, பெண் குழந்தை பலி
மதுரை அருகே பேரையூர் செல்லாண்டிபுரத்தை, சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ஒன்றரை வயது மகள் ஹன்சிகா. இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்து சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து டி. ராமநாதபுரம் காவல் துறையினர் ,வழக்கு பதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி