மதுரை: நேற்று 21.08.2019 D2–செல்லூர் ச&ஒ காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சோமு அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பாலம் அருகில் ரோந்து சென்றபோது கணேசன் 48/19, த/பெ.கிருஷ்ணன், சிம்மக்கல், மதுரை என்பவர் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பு-ஆய்வாளர் திரு.ஐசக் சாமுவேல் அவர்கள் அழகர்கோயில் மெயின்ரோட்டில் ரோந்து செய்தபோது கார்த்திக் 24/19, த/பெ.கருப்பையா, காமராஜபுரம், மதுரை மற்றும் ஐயப்பன் 39/19, த/பெ.அய்யம்பெருமாள், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் ஆகிய இருவரும் மதுவிற்பனை செய்ததை கண்டுபிடித்தார். மதுரை ஜவகர்புரம் பகுதியில் முத்தையா 44/19, த/பெ.குருசேர்வை, அதலை, மதுரை மாவட்டம் என்பவரும் மற்றும அம்மன் சந்நிதி தெரு ஆறுமுகம் 42/19, த/பெ.சின்னப்பன், திருப்புவணம், சிவகங்கை மாவட்டம் என்பவரும் மது விற்பனை செய்வதை கட்டுபிடித்தார். மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 76 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்