மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், (2-10-2021), அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், புதிய நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், மயானத்தில் காத்திருப்பு அறைகள்-
மெட்டல் சாலை, தெரு விளக்குகள் , புதிய போர்வெல் மற்றும் ஓ.ஹெச்.டி. மோட்டார் அமைத்தல், 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டி, கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்ட, முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சியர் திரு. அனிஷ் சேகர், தலைமையில், மற்றும் பதிவுத்துறை அமைச்சர், , நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பழனிவேல், திரு.தியாகராசன், ஆகியோர் திறந்த வைத்து, மரக்கன்றுகளை நட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. வீ. பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவர் திரு. முருகானந்தம், ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி