சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் , கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும், நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 345, கோரிக்கை மனுக்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, 20 மனுக்களும் என மொத்தம் 365 கோரிக்கை, மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி, பெற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின், கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர், மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், மற்றும் இதர மனுக்கள் போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை, மேற்கொண்டு,
உரிய பயன்களை பயனாளிகளுக்கு கிடைக்க, துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவிட்டார். இக்கூட்டத்தில்;, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப.மணி வண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை, ஆட்சியர் திரு. மு.காமாட்ச, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல் உட்பட , அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி