கரூர் : கரூர், வாங்கல் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை, கொடுத்த, வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர், கைது செய்தனர். கரூர் மாவட்டம், வாங்கல் நெரூர் வடக்கு பாளையூர், பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் திலீப், (24), இவர் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த, (17), வயதுடைய, பிளஸ் 2 படித்து வரும், மாணவிக்கு கடந்த, 14ம், தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தந்தை, புகார் செய்தார். இதையடுத்து, வாங்கல்காவல் துறையினர் , திலீப்பை போக்சோ சட்டத்தில், கைது செய்தனர்.