சென்னை : சென்னை மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (39), இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த 2 வாரங்களாக கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தனது தம்பியை பார்ப்பதற்காக வந்த குலாம் ரசல், சைபில் சைக் பணிபுரிந்த மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல், 10-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.