செங்கல்பட்டு : மறைமலை நகர் சிங்கப்பெருமாள் கோவில், கொல்லைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார், (48), மறைமலை நகர் காமராஜர் சாலையில், தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, மறைமலை நகர் பகுதியில், ஒரு தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனம், சசிகுமார் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து , காவல் துறையினர், உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், இது குறித்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.