சென்னை : மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னையில், பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022), சென்னை வருகை புரிகிறார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144ன் கீழ், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (26.05.2022) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா, வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள், பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை, சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர்.