அரியலூர் : அரியலூர் மாவட்டம், பு.ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின், மகன் செல்வ சிவபாலன் (19), இவர் திருவையாறில், உள்ள அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மது அருந்தும் பழக்கமுடைய செல்வ சிவபாலன், மது அருந்தி விட்டு கல்லூரிக்கு செல்லாமல், இருந்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வ சிவபாலன் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து வல்லகுளம் பேருந்து நிலையம், அருகே மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில், அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வ சிவபாலன், பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.