கரூர் : கரூர் மாவட்டம், கடவூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள், கணேசன், (28), முனியப்பன், (23), இவர்கள், அதே பகுதியை சேர்ந்த, (23), வயது மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த, 2020 ஜூன், 17ம் தேதி கடத்தி, சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, பெண்ணின் தந்தை, கொடுத்த புகாரின் படி, குளித்தலை மகளிர் காவல் துறையினர், கணேசன், முனியப்பனை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கணேசன், முனியப்பனுக்கு தலா, 40, ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.