கோவை : கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத், தலைமையிலானகாவல் துறையினர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, என்.எச்., ரோடு, மணியன் தோட்டம் முதல் தெருவில் இருக்கும் அரவை மில்லில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பதுக்கி வைத்திருப்பதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல் துறையினர் , 1,710 கிலோ ரேஷன் அரிசி, 540 கிலோ கோதுமை, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி, கோதுமை பதுக்கி வைத்திருந்த அகமது, (30), இம்தியாஸ், (36), ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில், ரேஷன் அரிசி, கோதுமையை அரைத்து மாவாக்கி அதிக விலைக்கு விற்பனை, செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் , ரைஸ் மில் உரிமையாளர் இன்பு(எ)இம்ரான் என்பவரை தேடி வருகின்றனர்.