சென்னை : ஆவடி திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால், (27), கொரட்டூர் பகுதியில், கொத்தனாராக பணியாற்றி வருகிறார். நேற்று, காலை 8:30 மணியளவில், வேலைக்கு செல்ல திருமுல்லைவாயல், ரயில் நிலையம் வந்தார். அப்போது, தண்டவாளத்தை கடக்கும்போது, அரக்கோணத்திலிருந்து சென்னை, செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆவடி ரயில்வே காவல் துறையினர், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.