சென்னை : சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் குடித்துவிட்டு தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வசந்தா (48), மதுரவாயல் காவல் துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், யாரோ கழுத்தை கயிற்றால், இறுக்கி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.




















