மதுரை: மாவட்டம் 27:08:19 சீட்டு விளையாடிவர்கள் கூண்டோடு கைது. ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், திரு. ஆனந்த தாண்டவம், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 11 நபர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் பணம் ரூ -30,160 யை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது ஒத்தகடை போலீசார் பிரிவு: 8,9 TNG Act படி வழக்கு பதிவு செய்தனர் .
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்