வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் விபூதி, நாமம், தலையில் தொப்பி மற்றும் தாடி உள்ளிட்டவைகள் வைக்கக் கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மேலும், தலையில் ‘கிருதா’வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது.
இதனை எதிர்த்து வேலூர் கோட்டைக்குள் இருந்த 1500 இந்து, முஸ்லீம் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பலர் இடமாற்றமும், பலருக்கு 50 முதல் 600 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர்.
பின்பு, ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டை கதவை வெடிவைத்து தகர்த்து கோட்டையை கைப்பற்றியது.அந்தச் சண்டையில் இந்திய 350 துருப்புகள் உயிர் இழந்தனர். அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிக்கு காரணமான இராணுவ ஆணைகள் திரும்ப பெறப்பட்டன. சிப்பாய் புரட்சி ஒரே நாளில் ஒடுக்கப்பட்டாலும் அன்று வரை வரலாற்றில் நீங்காத நிகழ்வாக இன்றும் நினைவு தினம் கடைபிடிக்கபட்டு வருகின்றது.