கடலூர்: கடலூர் மாவட்டம்¸ சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் 02.01.2018ந் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நடராஜரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இவ்விழாவில் அனுக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் குழந்தை காணாமல் போனது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C.விஜயகுமார் IPS அவர்களின் உடனடி நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயார் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.