சென்னை : சென்னை கொருக்குப்பேட்டை, ஹரிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (19), நேற்று முன்தினம் இரவு இவர், பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம், பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். யாரோ மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடியது தெரிந்தது. உடனடியாக ராகுலை சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆர்.கே .நகர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ராகுலை கொலை, செய்தவர்கள் யார்? என விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்த, கொலையில் தொடர்புடைய 3 பேர், நேற்று அதிகாலை ஆர்.கே .நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள், கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த சங்கர், என்ற கவுரி சங்கர் (25), கொருக்குப்பேட்டை, பென்சில் பேக்டரி சாலையை, ச் சேர்ந்த ரகுமான் (20), தண்டை யார்பேட்டையை சேர்ந்த சரவணன் (20) என தெரியவந்தது.