கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹8,100 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள்,₹1,300/-ரூபாய் மதிப்பிலான வெளி மாநில மதுபானம் இருந்தது, வெளி மாநிலத்திலிருந்து புகையிலை, மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள், மதுபானம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்