சென்னை : புழல் , கோவில் திருவிழாவில், தீமிதித்த போது, தீக்குழியில் தவறி விழுந்த பெண், சிகிச்சை பலனின்றி பலியானார். சென்னை புழல், காவாங்கரை, திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி, இவரது மனைவி சந்திரா (45), இவர், கடந்த மாதம் 17ம் தேதி, அதே பகுதியில் உள்ள, வெட்டுடையார், காளியம்மன் கோவில் திருவிழாவில், நடந்த தீமிதி நிகழ்வில் பங்கேற்று தீமிதித்தார். அப்போது, தவறி தீக்குழியில் விழுந்தார். காலில் தீக்காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். அங்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து, புழல் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.