தமிழ்நாட்டில் 21 I.P.S அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது இதையடுத்து திரு.சைலேஷ்குமார் யாதவ், அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல்D.G.P யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக திரு.ரோகித் நாதன் ராஜகோபால், காவல்துறை நல வாரிய பிரிவு D.G.P யாக திரு.கருணா சாகர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தென் மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக திரு.மகளின ஐடன், நியமிக்கப்பட்டுள்ளார், சென்னை மகளிர் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையராக திருமதி.ஜி.வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக திரு.மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார், சென்னை காவல் தலைமையாக துணை ஆணையராக எஸ். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.செல்வராஜ், நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. E.D சாம்சங் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.ஆஷிஷ் ராவத், நியமிக்கப்பட்டுள்ளார் சென்னை அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளராக S.R செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையகத்தின் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக திரு எஸ் எஸ் மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை CBCID காவல் கண்காணிப்பாளராக திருமதி.ஜெ. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை DIG ஆக திரு.அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக திரு.அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக ரஜத் சதுர்வேதி, நியமிக்கப்பட்டுள்ளார்.