சேலம் : சேலம் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிமை கோரப்படாமலும் இருந்த வாகனங்களை குற்றவியல் நடைமுறை சட்டம் 102 CRPC யின் கீழ் கைப்பற்றப்பட்டு அதனை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலமாக படிப்பிலக்கம் செய்து அரசுடைமை ஆக்கப்பட்டு வைத்து இருந்த வாகனங்களை இன்று சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டு சக்கர வாகனம் – 515 மற்றும் நான்கு சக்கர வாகனம் 23 மொத்தம் 538 வாகனங்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணடி காவல் துறை கண்காணிப்பாளர் திரு. சண்முகம் மற்றும் தாசில்தார்கள் சங்ககிரி எடப்பாடி மேட்டூர் ஓமலூர் சேலம் தெற்கு தொங்கவல்லி ஏற்காடு ஆகியோர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்ததில் அரசுக்கு 20,85,060 /- வருவாய் கிடைத்துள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்