ஈரோடு : கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து சென்னிமலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் வழங்கி வருகின்றனர். பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு மட்டுமின்றி தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சி உட்பட சென்னிமலை பஸ் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் Tr. சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் Tr. கிருஷ்ணராஜ், HC 873 , Tr.குமார் / PC சுரேஷ் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :