திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் 19.02.2020 அன்று காவல்துறையின் சார்பாக CCTV கேமரா பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வீட்டில் வீடியோ கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது. நாம் வீட்டில் இல்லாத சமயம் உங்கள் வீட்டை யார் பாதுகாப்பது என்று சிந்தித்து இருக்கின்றீர்களா? அந்த நேரங்களில் உங்கள் பொருட்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும் வீடியோ கண்காணிப்பு கேமரா.
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் போலீசின் விசாரணைக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது கண்காணிப்பு கேமராவும், செல்போனும் தான். வீடுகள், குடியிருப்புகளை விட பொது இடங்களில் தான் அதிக அளவில் குற்றங்கள் நடக்கின்றன. எனவே பாதுகாப்புக்காக பொது இடங்களில்தான் அதிகம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்