செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் உட்கொட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்துவரும் (13) வயது சிறுமி (04.11.2022), ம் தேதி காலை சுமார் 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்து காணாமல் போனதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பிரதீப் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.ரவிக்குமார், அவர்களின் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து (04.11.2022) ம் தேதி மாலை சுமார் 17.00 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரையில் இருந்து மீட்டு சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.காவல் துறையினரின் இத்தகைய துரிதமான நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.