செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட காவல் அலுவலகமானது இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் இன்றிலிருந்து செங்கல்பட்டை மையமாகக் கொண்டே செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.