திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு கிழக்கு ஆரோக்கியமாதா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத்(32), என்பவர் (15) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வினோத் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கவிதா (37), ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.ஜோதி, அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (29.09.2022), ம்தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி வினோத் என்பவருக்கு 40 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.40,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளியான கவிதா என்பவருக்கு 10 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா