சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் புறவழிச் சாலையில் கோபி (29) நாராயணபுரம் முல்லைவாடி என்பவர் மதுரா டிரேடர்ஸ் என்னும் பெயரில் சிறு தொழில் செய்து வருகிறார். இவரின் எலைட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ரியாஸ் மற்றும் காவியா ஆகியோர் கடந்த (17/7/2022), (18/7/2022), மற்றும் (19/7/2022), ஆகிய தேதிகளில் முறையே 6,75,000/-, 5,50,000/- , மற்றும் 94,920 என மொத்தம் 13,19,120/- மதிப்புள்ள மக்காச்சோளத்தை வாங்கிக்கொண்டு அதற்கு 5,80,000/- காசோலையை கொடுத்துவிட்டு மீதி பணத்தை ரொக்கமாக கொடுப்பதாக கூறியவர்கள் பணத்தை தராமல் கொடுத்த காசோலையை ஸ்டாப் பேமென்ட் செய்துவிட்டு ஏமாற்றிய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வாதியானவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களிடம் நேரில் கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மேற்படி குற்றவாளிகள் மீது மூன்று நாள் 2023ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்