திருப்பூர் : திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள காலியிடத்தில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு 1,275 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை அப்பகுதியை சேர்ந்த அஜித்பாண்டி (23) என்பவர் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஜித்பாண்டியை கைது செய்து 1,275 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.