சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், அவர்கள் புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் (Beacon Lights) பொறுத்தப்பட்டுள்ள 100 Gypsy ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் மூலம் நாள்தோறும் பெறப்படும் அவசர சேவை அழைப்புகளுக்கு விரைந்து சேவை வழங்கிடவும் மற்றும் சேவையை பலப்படுத்தும் விதமாகவும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 100 ரோந்து வாகனங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், அவர்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தமிமிழக அரசு தெரிவித்துள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா